பகலில் ஒரு குட்டி தூக்கம் போடுவது நல்லதா..? ஆபத்தானதா..? மருத்துவர்கள் கூறுவது..?
பகலில் துங்குவது பலருக்கும் பிடிக்கும்.குறிப்பாக இல்லதரசிகள் தான் அதிகம் விரும்புவார்கள். அப்படி தூங்குவது நல்லதா கெட்டதா என்பதை பார்க்கலாம்..
பெரும்பாலானவர்கள் பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், பகலில் 30 நிமிடம் தூங்குவது என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கும் மூளையின் செல்களுக்கும் நல்லது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
இரவில் மட்டுமே தூங்குபவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்குபவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்படுகிறதாம்.
இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது சிறிது நேரம் குட்டித் தூக்கம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்..
ஆய்வுகளின் படி, பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும். அதே நேரம், அதீத பகல் தூக்கம் உடலுக்கு நல்லதல்ல என்றும் பகல் தூக்கம் நீடித்துக்கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் பகலில் தூங்குவதை உடனே நிறுத்த வேண்டும்.
பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் :
பகல் தூக்கத்தால் அஜீரணம், வயிற்று வீக்கம், மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
யாரெல்லாம் பகலில் தூங்கலாம்..?
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் ஆகியோர் சிறிது நேரம் தூங்கலாம்.. என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..