லாகூரிலுள்ள விமானப்படைத்தளத்திலுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தாக்கி முற்றிலும் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹால்காம் தாக்குதலையடுத்து ,பாகிஸ்தான் மீது நேற்று முன்தினம் இரவு முதல் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மீது இன்றும் 10 நகரங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சியால்கோட் , லாகூரில் வால்டன் சிமானப்படைதளத்திலுள்ள வான்பாதுகாப்பு அமைப்பான HQ-9 சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சீன தயாரிப்பு ஆகும். இந்த தாக்குதலை தடுக்க முடியாமல், பாகிஸ்தான்விமானப்படையால் தடுக்க முடியவில்லை. தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான ஹராப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லாகூர் மட்டுமல்ல குஜ்ரன்வாலா, ராவல் பிண்டி, கராச்சி உள்ளிட்ட 10 நகரங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லாகூரில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் விழுந்ததால் மக்கள் வீடுகளை நோக்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர்.