வெற்றிலை சாப்பிட்டால் இந்த பிரச்சனையே இருக்காது…!!
நமது முன்னோர்கள் சாப்பிட பின் வெற்றிலை பாக்கை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது மட்டுமா அந்த காலத்தில் எல்லாம் எந்த நோய்காகவும் அவர்கள் மருந்து மாத்திரை என செல்வதை விட மருந்தே உணவே என வாழ்ந்தவர்கள். இந்த தலைமுறையில் கூட பலரும் பிரியாணிக்கு பின் பீடா சாப்பிடுவது உண்டு
அந்தவகையில் வெற்றிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
உணவிற்கு பின் வெற்றிலை உண்பதால் சிறந்த செரிமானத்தை கொடுப்பதால் செரிமாணத்திற்கான என்சயம்களை உருவாக்குகின்றன. இதனால் செரிமான குழாய்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன.
வாயில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கிறது. மேலும் இருக்கும் கெட்ட பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் வாய் தோற்று ஏற்படாமல் தடுக்கின்றன.
வெற்றியலை மென்னு சாப்பிடுவதால் வயிறில் உள்ள அசிடிட்டியின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உணவுக்கு பின் உண்டாகும் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கிறது
பல் வலி, ஈறு வலி, வீக்கம்போன்றவற்றிற்கு எதிராக போராடுவதால் குடல் ஆரோக்கியம் சரியாக செயல்படுவதாக சொல்லபடுது. இதன காரணமாக பல சிதைவு ஏற்படாமல் இருக்க உதவுகின்றன.
செரிமானத்தை சரியாக மேம்படுத்துவதால், மல சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகின்றன. இதனால் வயிறு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
சாப்பிட பின் வாயில் ஒட்டிக்கொள்ளும் சில துணுக்குகள், வெற்றிலை சாப்பிடுவதால் சுத்தமாகின்றன. இது இயற்கையான ஒரு சுத்த செயலியாக செயல்படுகிறது.
தினமும் சாப்பிட்டிற்கு பின் சாப்பிடும் வெற்றிலை பசியின்மையை போக்க உதவுகிறது. மேலும் இது ஒரு ஆன்டி ஆக்ஸிடண்ட்களாக செயல்படுகிறது.
– கவிப்பிரியா