பெண்களே இது உங்களுக்குத்தான்..!
கீரை கடையல் செய்ய வேகவைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
காலிஃபிளவரில் சிறிது பால் ஊற்றி வேகவைக்க அதன் நிறம் மாறாது பச்சை வாசனையும் இருக்காது.
பீட்ரூட் மற்றும் கேரட் வாடிபோய்விட்டால் நறுக்க கடினமாக இருக்கும் அப்போ அதனை உப்பு நீரில் சிறிது ஊறவைத்து பின் நறுக்கினால் ஈசியாக நறுக்கலாம்.
வெண்ணெய், தயிர், நெய் ஆகியவை வைத்திருக்கும் பாத்திரம் காலியாகிவிட்டால் அதில் சூடான நீர் ஊற்றி சிறிது வைத்திருந்து கழுவினால் பிசுபிசுப்பு போய்விடும்.
பிரியாணியில் உப்பு அதிகமாகிவிட்டால் அதில் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு கிளறிவிட்டால் உப்பு தெரியாது.
இட்லியை துண்டுகளாக்கி வெண்ணெயில் பொரித்து பின் சூப் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
சப்பாத்தி மாவில் சிறிது பட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து ஊறவைத்து சப்பாத்தி சுட்டால் மிருதுவாக வரும்.
தேங்காய் எண்ணெயில் சிக்கு வாசனை வராமல் இருக்க அதில் ஆறு மிளகு சேர்த்தால் வாசனை வராது.
எந்த சிப்ஸிலும் நெய்யில் காரம் கலந்து சிப்ஸில் சேர்த்து கிளறினால் நல்ல வாசனையாக இருக்கும்.
முட்டைக்கோஸ் பொரியல் செய்யும்போது அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறினால் சுவையாக இருக்கும்.
புலாவ் செய்யும்போது அதில் சிறிது தயிர் மற்றும் பால் சேர்க்க நல்லா சுவையாக இருக்கும்.
ரவா உப்மா செய்யும்போது அதில் பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கி சேர்த்து செய்தால் உப்மா நிறைய கிடைக்கும்.
வேர்க்கடலையை மணலில் பொரித்தெடுப்பது போல வத்தலையும் மணலில் பொரித்தால் பெரியதாக வரும்.