மோடி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை இருக்காது..!! திருமாவளவன் விமர்சனம்..!!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் எந்த அளவிற்கு சூடு பிடித்துள்ளதோ அதே அளவிற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மோடி ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் மீண்டும் தேர்தல் இருக்காது எனவும் குடியரசு ஆட்டசியை நடைமுறை படுத்துவார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறது ஆனால் பாஜக கொடுக்குமா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில், திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த தேர்தல் பரப்புரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்தழகன் மற்றும் இல பாஸ்கர் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மேடையில் பேசிய தலைவர்கள்.
ஊழலை சட்ட பூர்வமாக செய்யும் கட்சி பாஜக தான். பிரதமர் மோடி சாலை பேரணி தானே நடத்தி கொண்டார். மோடி தமிழகத்தில் 07 முறை சாலை பேரணி நடத்தினாலும், 700 முறை பேரணி நடத்தினாலும் எந்த பயனும் இல்லை
ஒரு குடும்பத்திற்கு அடிப்படை தேவையான இலவச கேஸ் என்ற திட்டத்தை அந்த காலத்திலலேயே கலைஞர் கொண்டு வந்தார்.
திமுக அரசு எந்த இலவச திட்டங்கள் கொடுத்தால் அதற்கு பெயர் அடிப்படை சமூக நீதி என்று தான்.
அதற்கு பெயர் இலவசம் இல்லை பெண்கள் அவர்கள் அம்மா வீட்டிற்கு செல்ல அந்த மகளிர் உரிமை தொகை உதவுகிறது.
அந்த 1000 ரூபாய் மருத்துவத்திற்கு கூட உதவுகிறது.
தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவர் ஒரு பேராளுமை திறமை கொண்டவர். உலகம் தழுவிய அளவில் அவர் செல்வாக்கு உள்ளது. நாடாளுமன்றத்தில் பல்வேறு மொழிகளில் சிறப்பாக வாதாடும் திறமை அவருக்கு உள்ளது.
திராவிட அரசியலை மீண்டும் நாடாளுமன்றத்தில் முழங்க வேண்டும் என மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் முதலமைச்சர். என்னுடைய சிதம்பரம் தொகுதியில் 30 சதவீதம் கூட தேர்தலுக்க்காக மக்களை சந்திக்கவில்லை.
தமிழச்சி வெற்றி பெற வேண்டும் என தென்சென்னை பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வந்தேன்..,
இது நாடாளுமன்ற தேர்தல் கிடையாது.. பொதுமக்களின் யுத்தம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் அடித்தளம் போட்டவர் மு.க.ஸ்டாலின்.
திமுகவிற்கு, அதிமுக எதிர் கொள்ளவது எளிது. எடப்பாடி பாஜக கூட்டணியில் இல்லாமல் தனித்து நிற்கிறோம் என்று கூறுக்கிறார். எதற்கு கூட்டணி இல்லை என்று குறித்து கூற மறுக்கிறார் எடப்பாடி.
அதிமுக கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு மோடி பற்றி எந்த விமர்சனம் செய்யாமல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த கட்சி என்றால் அது விசிக தான். நலிவடைந்த வேட்பாளர் என்றால் அது திருமாவளவன் தான் என்று உங்களுக்கு தெரியும். என்னுடைய வீட்டிலேயே கூட வருமான வருமான வரி துறையினர் வைத்து மோடி சோதனை செய்தார். ஆனால் அவரால் என்னை ஊழல் வாங்குபவன் என்று நிருபிக்க முடியவில்லை.
நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டியுள்ளேன். மீண்டும் மீண்டும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்தால் ரேஷன் கடை இருக்காது, தேர்தல் இருக்காது, ஆளுநர் ஆட்சி இல்லாமல் குடியரசு ஆட்டசியை நடைமுறை படுத்தப்படும்.
இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது, சமூக நீதி இருக்காது மேலும் மகளிர் உரிமை தொகை கொடுக்க முடியாது. மீண்டும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் திமுக அரசை கலைப்பார்கள். பாஜக இல்லாத மாநில அரசை கலைப்பார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறது ஆனால் பாஜக கொடுக்குமா..? சமூக நீதிப் மற்றும் இட ஒதுக்கீடு பற்றி மோடி பேச மாட்டார்கள் மோடி, அமித்ஷா தமிழச்சி தங்கப்பாண்டியனை எதிர்க்கிறவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தெரிவித்தார்…
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..