மனைவியிடம் தகராறு செய்த கணவன் கொலை..!! வாலாஜாபேட்டையில் பயங்கரம்..!
வாலாஜாப்பேட்டை அருகே கணவன் தொடர்ந்து குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால் மனைவி ஆத்திரமடைந்து கட்டையால் தாக்கியதில் கணவன் பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (40). லாரி ஓட்டுனரான இவருக்கு மனைவி பானுமதி (34), இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் தேவராஜ் தொடர்ந்து தினம்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி சண்டை போட்டுக்கொண்டு, தனது தாய் வீடான சின்னதகரகுப்பம் கிராமத்தில் இருந்து வந்துள்ளார்.
பின்னர் நேற்று இரவு அதிக அளவில் குடித்துவிட்டு அங்கு வந்த தேவராஜ் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தகராறு செய்து வந்த தேவராஜ், பானுமதியிடம், நீ உயிருடன் இருக்கக் கூடாது.
என சொல்லி மனைவியின் மீது கருங்கல்லை போட முயற்சித்துள்ளார். அதில ஆத்திரமடைந்த பானுமதி, அருகில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து தேவராஜ் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்துள்ளார்..
மேலும் இந்த சம்பவம் குறித்து தேவராஜின் தம்பி, போலீசில் புகார் அளித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தேவராஜ் என்பவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கொலை செய்த குற்றத்திற்காக, பானுமதியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.