பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம்..!! அனந்தாழ்வார் கோரிய மன்னிப்பு..?
பெருமாளின் தாடைப்பகுதியில் எப்போதும் பச்சை கற்பூரம் இருக்கும் அது ஏன் தெரியுமா..? அனந்தாழ்வார் என்ற ஒருவர் பெருமாளின் தீவிர பக்தனாக இருந்து வந்துள்ளார். தினமும் அவருக்கு பூஜைகள் செய்வது, பெருமாளை சேவிப்பது மட்டுமே அவரின் வேலையாக இருந்து வந்துள்ளது.
ஒருமுறை அனந்தழ்வாரின் மனைவி, அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாவது பெருமாளுக்கு என்று நாம் ஒரு கோவில் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். கர்ப்பிணி மனைவியின் ஆசையை நிறைவேற்ற அனந்தழ்வாரும் சரி என்றுக் கூறி கோவில் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவன், தானும் சேர்ந்து கோவில் கட்ட உதவட்டுமா என்று கேட்டுள்ளான். ஆனால் அந்த சிறுவனை அங்குள்ளவர்கள் ஏளனமாக பார்த்து சிரித்துள்ளார்கள். அனந்தழ்வாரும் தம்பி நீ இங்க எல்லாம் வரக்கூடாது போ என்று சொல்லி அதட்டியுள்ளார்.
ஆனாலும் அந்த சிறுவன், இதை பொருட் படுத்தாமல் அங்கு வேலையை செய்ய தொடங்கியுள்ளான். இதனை கண்ட அனந்தழ்வார், ஆத்திரத்தில் அந்த சிறுவனை கடப்பாரையால் தாக்கியுள்ளார். அதில் அந்த சிறுவனுக்கு முகத்தில் இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மறுநாள் கோவிலின் உற்சவருக்கு பூஜை செய்வதற்காக, பூசாரிகள் சென்றுள்ளனர். அப்போது பெருமாளின் முகங்கள் முழுவதும் இரத்தம் கசிந்துள்ளது.
செய்வதறியாது திகைத்த, அவர்கள். அனந்தழ்வாரிடம் சென்று கூறியுள்ளனர். பின் கோவிலுக்கு வந்து அவர் பார்த்தபோது, ஒரு விஷயம் நினைவிற்கு வந்துள்ளது.
நமக்கு கோவில் கட்ட உதவ வந்தது சிறுவன் அல்ல பெருமாள் என்று, வேதனை அடைந்த அனந்தாழ்வார். பெருமாளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு, பச்சை கற்பூரத்தை எடுத்து பெருமாளின் தாடையில் வைத்துள்ளார். அதன் பின் இரத்தம் கசிவது நின்றுள்ளது.
அதன் பின்னரே பல்வேறு கோவில்களில் உள்ள பெருமாள் சிலையை நீங்கள் உற்று பார்த்தல் இதனை உணர முடியும்..