வேண்டும் வரம் கொடுக்கும் வெக்காளி அம்மன்..!! வழிபட வேண்டிய முறை..!
திருச்சியில் எழுந்தருளி கோவில் கொண்டுள்ள வெக்காளி அம்மன்.., கூரையின்றி இருக்கிறார் அதற்கு காரணம்..,
முன்னுறு ஆண்டுகளுக்கு சோழ மன்னன் என்று அழைக்கப்பட்ட பராந்தக சோழன் உறையூரில் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது சாரமா என்ற முனிவர் ஒருவர் பூந்தோட்டம் அமைத்து அதில் கிடைக்கும் மலர்களை பறித்து தினமும் தாயுமானவரை வழிபட்டு வந்தார்.
இப்படியே நாட்கள் செல்ல சில நாட்களாக பூந்தூட்டத்தில் மலர்கள் காணாமல் போக ஆரமித்துள்ளது.
யார் இந்த பூக்களை எல்லாம் பறித்து செல்கிறார்கள் என்ற குழப்பத்தில் இருந்தார் முனிவர். அதை கண்டு பிடிப்பதற்காக ஒருநாள் தோட்டத்தில் மறைமுகமாக இருந்தார்.. அப்போது பிடிபட்ட அரசவையை சேர்ந்த வாயுக்கவாலன் பராந்தக சோழ மன்னன் தான் பறித்து வரச் சொன்னதாக கூறினான்.
கோபம் அடைந்த சாரமா முனிவர் மன்னரிடம் சென்று, ஏன் எனது தோட்டத்து பூக்களை பறித்து செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மன்னர் பதில் அளிக்காமல் முனிவரை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார், தாயுமானவரை நோக்கி தவமிருந்த முனிவர் அவரிடம் தனது குறைகளை முறையிடுகிறார்.
தனது பக்தரின் மன வேதனையை கண்டு ஆத்திரமடைந்த தாயுமானவர் சோழ நாட்டின் மீது மண் மழையை பொழிய செய்கிறார் இதனால் அரண்மனை மட்டுமின்றி அங்கிருந்த அனைத்து வீடுகளும் மண்ணில் கரைந்தது இதனால் அப்பகுதி கிராம மக்கள் வீடின்றி தவித்தனர்.
மக்களின் இந்த வேதனையை கண்டு மனமுடைந்த வெக்காளியம்மன், தாயுமானவரிடம் சென்று முறையிட்டு மக்களின் வேதனையை போக்கினார்.
மண் மழை நின்றாலும் மக்கள் வீடின்றி தவித்தனர்.., மக்களின் நிலையை புரிந்த கொண்ட வெக்காளி அம்மன்.., உங்கள் அனைவருக்கும் சொந்தமாக வீடு கிடைக்கும் வரை எனக்கும் கூரை வேண்டாம் என்று முறையிட்டார்.. அதனால் தான் இன்று வரை வெக்காளி அம்மன் கூரை இல்லாமல் மழை வெயிலில் இருக்கிறார்.
மக்களுக்காக இன்று வரை கூரை அமைத்துக் கொள்ளாமல் இருக்கும் நம் வெக்காளி அம்மனிடம் எந்த வேண்டுதல் வைத்தாலும் அதை நிறைவேற்றி தருவார்.., நம் வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி அதனை வெக்காளி அம்மன் சூலத்தில் கட்டி மனதார வேண்டிக் கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..