புதன் கிழமை விநாயகர் வழிபாடு.. நினைத்த செயல் வெற்றி பெற இந்த வழிபாடு அவசியம்..!
புதன் கிழமை விநாயகருக்கு உகுந்த நாளாக கருதப்படுகிறது. காரணம் விநாயகர் பிறந்த போது, புதன் பகவான் கைலாயத்தில் இருந்துள்ளார். எனவே விநாயகரை புதன் கிழமை அன்று வழிபட்டால், புதன் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
அனைத்து கடவுள்களிலும் முதன்மை கடவுள் “விநாயகர்”. சிவபெருமான் திரபாசுரனை அழிக்காமல் விட்ட பின் அதற்கான காரணம் குறித்து யோசித்துள்ளார். பின் சண்டைக்கு முன் விநாயகரை வழிபடாதது காரணமாக இருக்குமோ என நினைத்து.
விநாயகருக்கு கொழுக்கட்டை, கரும்பு, பழங்கள், பருப்பு, பொறி, அவள், எள், இளநீர், தேன், பயிறு, அப்பம், வெள்ளரி பழம் , கிழங்கு, கொண்ட கடலை, மூக்கடலை, மற்றும் அன்னம் இவை என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த வகையான உணவுகளை படைத்தது, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் சதுர்த்தி அன்று விரதம் இருந்தால், வீட்டில் செல்வம் செழிக்கும், கடன் நீங்கும், நன்மை பெருகும்.
அல்லது வாரத்தில் இரு முறை விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிந்து மாலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். 108 கணபதி மந்திரம் சொல்லி வழிபடுவது இன்னும் பலன் தரும்.
* வாரந்தோறும் புதன்கிழமை அன்று வன்னி மர இலைகளை வைத்து வழிபட்டால் அதிக புத்திசாலி தனமும், பலமும் கிடைக்குமாம்.
* புதன் கிழமை அன்று விநாயகரை வணங்கி விட்டு, கீரை சாப்பிட்டு வெளியே சென்றால் வேலையில் வெற்றி நிச்சயம்.
* விநாயகருக்கு இனிப்பு வைத்து வழிபட்டால் திருமண தடை விலகி, விரைவில் திருமணம் நடக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
Discussion about this post