தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் உணவுகள்..!
குழந்தை பெற்ற பெண்களில் ஒரு சிலர்க்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரக்கவே சுரக்காது. இதை சரி செய்ய மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதை காட்டிலும், சில உணவுகளை சேர்த்துக்கொண்டாலே போதும்.
கொண்டைக் கடலை : கொண்டைக் கடலையில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. வாரத்திற்கு மூன்று முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால் : கால்சியம், புரதம், கொழுப்பு மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்து இருப்பதால், தினமும் இருவேளை குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பி அதிகரிக்கும்.
தர்பூசணி : தர்பூசணியில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு ஜூஸ் குடிக்கலாம்.
சால்மன் மீன் : வாரத்திற்கு இரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதயநோயால் ஏற்படும் அபாயத்தில் இருந்தும், பாதுகாக்கிறது.
பாதம் : தண்ணீரில் ஊற வைத்த பாதம் பருப்பை, தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
ஆட்டு ஈரல்,கோழி ஈரல் : ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரலை மிளகு சேர்த்து பொரியல் செய்துக் கொடுக்கலாம், தாய்ப்பால் சுரப்பிற்கு அதிகம் உதவும். வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
முருங்கைக்கீரை : முருங்கைக் கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி