ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சித்திரை திருவிழா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் கோடை உற்சவம் தொடங்கி சிறப்பாக நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 6மணிக்கு ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டு. சந்தன காப்பு செலுத்தினர்.
பின் கோவில் யானையின் மேல் ஏறி முக்கிய வீதிகளில் வீதி ஊர்வலம் சென்றுள்ளார். மேலும் மலை 6:30 மணிக்கு நீராழிகுளம் மண்டபத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. நீராழிகுளம் மண்டபத்தில் ஆண்டாள் காட்சி கொடுத்தார்.
பின் ரெங்கமன்னாரை ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். மே 5ம் தேதி சித்திரா பௌர்ணமி என்பதால், தொடர்ந்து 8 நாட்களுக்கும், ஒவ்வொருவர் பூஜை செய்தனர்.
மே 5ம் தேதி திருவிழா நிறைவு பெரும் எனவும். தெரிவித்தனர்.
Discussion about this post