மைக் சின்னம் வேண்டாம்..? நாதக சீமான் கேட்ட புது சின்னம்..? காலதாமதம் ஏன்..? சீமான் விளக்கம்..
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்து புது சின்னம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.
எங்களுடைய கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு புதிய கட்சிக்கு கொடுத்துள்ளார்கள். முதலில் பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான் சின்னம் என சொன்னவர்கள் கடந்த தேர்தலில் அந்த கர்நாடக கட்சி 71 வாக்குகளைதான் வாங்கியுள்ளது.
அந்தக் கட்சி கர்நாடகாவிற்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவிற்கு கேஸ் ஸ்டவ் சின்னம் கொடுத்திருப்பதாக அக்கட்சியின் தலைவரே சொல்லியிருந்தார், கரும்பு விவசாயி சின்னத்தை தானே முன் வந்து கேட்கவில்லை, அவர்களாவே எனக்கு கொடுத்தார்கள். தற்போது தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனித்துவமான கட்சி :
உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். தமிழகத்தில் தனித்துவமான கட்சி எதுவென்று பார்த்தால், திமுக தேமுதிக விற்கு பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகவின் புதிய கட்சி வேட்பாளர் முதலில் மனு கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்தந்த பகுதிகளுக்கு சென்று நாங்கள் மேற்பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் பிஸியாக இருந்துவிட்டோம்.
இதனால் மனு அளிக்க கால தாமதம் ஆகிவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தேதிக்குள் நாங்களும் மனு அளித்துவிட்டோம். டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே தெரியவந்தது.
கர்நாடகாவில் இருந்து வந்த அந்த புது கட்சி தலைவர் கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது.
நாங்கள் மனு கொடுத்த பின்னரே தேர்தல் தேதி வெளியானது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின் கரும்பு சின்னத்தை வேறொருவருக்கு கொடுத்தால் அதை திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் நான் கருதுகிறேன்.
நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் கிடைக்க கூடாது என்று சிலர் திட்டமிட்டு செய்த வேலை நாங்கள் கட்சி ஆரம்பிக்கும் பொழுதே விவசாயி சின்னம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லை.. நான் கொண்டு போனதால் தான் அந்த சின்னம் விவசாயி என்று மாற்றப்பட்டது.
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு, 2019 மக்களவை மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தமுறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
சீமான் தரப்பு சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததாகவும் அதனால் சின்னம் கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சீமான் வழக்கும் தொடர்ந்தார் ஆனால் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அதன் பின் கப்பல், படகு, மைக், தீப்பெட்டி, ஜன்னல், செருப்பு உள்ளிட்ட பல சின்னங்களை சீமான் தரப்பு பரிசீலனை செய்து புதிய சின்னம் ஒன்றை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் நடவடிக்கையையும் நாதக கட்சியினர் மேற்கொண்டனர்.
இறுதியாக, நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேடைகளில் மைக்கில் ஆக்ரோஷமாக பேசும் சீமானுக்கு மைக் சின்னம் பொருத்தமானது என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், மைக் சின்னத்திற்குப் பதில், படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில், 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ’மைக்’ சின்னத்தை சீமான் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.