சனிக்கிழமை இதை மட்டும் செய்யாதீங்க..!!
சனிபகவானுக்கு சிறந்த நாளான இன்று சில விஷயங்கள் செய்யக்கூடாது என சொல்லுவார்கள்., ஏன் தெரியுமா..? இன்றைய நாளில் சனிபாகவனுக்கு பிடிக்காத செயல்களை செய்தால் நம் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்படும்.., மனக்கஷ்டம்.., என பல உண்டு அப்படி என்னென்ன செயல்களை செய்யக்கூடாது என படிக்கலாமா..?
சனிபகவானுக்கு மிகவும் சிறப்பு பெற்ற இந்த நாளில் இரும்பு சம்பந்தமான பொருட்களை வாங்க கூடாது என சொல்கிறார்கள் காரணம் சனி பகவானுக்கு ஆதிக்கம் செலுத்த கூடிய பொருள் என்றால் அது “இரும்பு” பொருள் மட்டுமே..
எனவே இன்றைய நாளில் இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்காது.., நிம்மதி கிடைக்கும்.
அதே சமயம் சிலருக்கு அதிக கடன் தொல்லை இருக்கும்.., அப்படி அதிக கடன் தொல்லை உள்ளவர்கள் இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்கினால் கடன் தீரும் ஐதீகம்..,
ஒரு சிலருக்கு சனி பிரச்சனை இருக்கும்.., அப்படி இருக்கும் நபர்கள் சனிக்கிழமை தோறும் எண்ணெய் வைத்து நீராடினால் சனி தோஷம் நீங்கும்.. என்பது ஐதீகம்..,
ஆனால் சனிக்கிழமை என்று எண்ணெய் வாங்க கூடாது என சொல்லுவார்கள். அப்படி வாங்கினால் சனி விலகாது என சொல்லுவார்கள்..
அதேபோல் வியாபரம் செய்பவர்கள் அதாவது உணவகம் சிற்றுண்டி மட்டும் ஓட்டல் வைத்து நடத்துபவர்கள் சனிக்கிழமை அன்று உப்பு வாங்கினால் வியபாரத்தில் நஷ்டம் ஏற்படும் என சொல்லுவார்கள்..,
ஆனால் அதே உப்பை நீங்கள் வெள்ளிக்கிழமை வாங்கி ஒரு பீங்கான் பாத்திரத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் உப்பில் மஹாலக்ஷ்மி வாசம் வீசும் என சொல்லுவார்கள்..
ஒரு சிலர்க்கு வாரத்தில் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் செய்யும் பழக்கம் இருக்கும்..,
அப்படி இருப்பவர்கள் சனிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் உள்ள அதிஷ்டம் துடைத்து கொண்டு போகும் என சொல்லுவார்கள்..
சனிக்கிழமை அன்று வீட்டிற்கு எள் வாங்க கூடாது.., ஆனால் அதே எள்ளை கொண்டு
சனிபகவானுக்கு தீபம் ஏற்றினால் செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம்..