யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம் தெரியுமா..?
யானைகளிடம் ஆசீர்வாதம் பெருவதில் ஒரு தெய்வ ரகசியம் காணப்படுகிறது. மகத்தான தெய்வ அம்சங்கள் நிறைந்த மிருகங்களில் யானையும் ஒன்றாகும்.
மிருகங்களில் பலமுள்ளதாகவும் மூலிகை மற்றும் தாவரங்களை உண்டு வாழும் உயிரினம் யானை ஆகும். இரண்டு நாசி துவாரங்களின் வழியாக, ஒரே சமையத்தில் சுவாசிக்கும் தன்மை உலகிலேயே யானைக்கு மட்டுமே உண்டு.
தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றக்கூடிய “பிராணாயாமம் வாசியோகம்” போன்றவைகள் ஆன்மீக பயிற்சி முறைகளாகும்.
இந்த ஆன்மீக பயிற்சியில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள், என்றுமே இரண்டு நாசி துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் வல்லமை அடைந்திருப்பார்கள்.
இதனை “சுழுமுனை வாசியோகம்” என்று அழைப்பர். அப்படிப்பட்ட சுழுமுனை வாசியோகம் பெற்ற ஒரு யானை தனது தும்பிக்கையை மனிதர்களின் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்தால், மனிதர்களுக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.