நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா..?
குங்குமம் என்பது சந்தனம், திருநீர் போன்று ஒரு திலகம், குங்குமத்தை நெற்றியில் வைக்கும் பொழுது நம்மை அழகாக காட்டுவதோடு ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
முக்கியமாக பெண்கள். பெண் நெற்றியில் வைக்கும் பொட்டு மற்றவர்களை பார்க்க தூண்டும் விதமாக இருக்கும் என சொல்லுவார்கள் ஆனால் ஒரு சில பெண்கள் பொட்டே வைப்பதில்லை வெறும் நெற்றியுடன் வைப்பது அது அழகை குறைப்பதை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் கெடுத்து விடக்கூடும்.
குங்குமம் அம்மன் சக்திகளுக்கு உதாரணமாக இருக்கும் ஒன்று அதனால் தான் பல கோவில்களில் இன்று வரை குங்குமத்தால் அர்ச்சனையும்.., அபிஷேகமும் செய்கின்றனர். குங்குமத்தை நெற்றில் பெரிதாக வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் காலத்தில் சொல்லுவார்கள்.
ஆனால் அதையே நாம் இன்று மாடர்னாக வைக்கிறோம்.., இரு புருவங்களுக்கும் இடையே இருக்கும் பகுதியை மைய பகுதி என்று சொல்லுவார்கள். எனவே அந்த பகுதியில் நாம் குங்குமத்தை வைக்கும் பொழுது நம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் வெப்பம் நெற்றி பகுதி வெளியே வெளியேற்றப்படும் அந்த சமையத்தில் நம் நெற்றி வெறும் நெற்றியாக இருந்தால் வெப்ப சக்தியை உள் இழுத்து விடும்..,
ஒரு சிலருக்கு அடிக்கடி தலைவலி வருவதற்கு இது தான் காரணம் அதிக வெப்பம். நெற்றி புருவங்களுக்கு நடுவே இருக்கும் மைய பகுதியில் குங்குமம் வைக்கும் பொழுது வெப்பத்தை வெளியே அனுப்புவதுடன்.., தலை நரம்பு மணடலத்தில் நரம்புகள் சுறுசுறுப்பாக செயல்படவும் செய்கிறது.
குங்குமம் வைப்பதால் மனஅமைதி மற்றும் மன அழுத்தம் குறைக்கப்படும், நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்கச் செய்யும். இருபுறவங்களுக்கு இருக்கு இருக்கும் ஆக்ஞா சக்ரம் அனைவரையும் கோப பட வைக்கும் நம் நெற்றியில் வைக்கும் குங்குமம் அதை கட்டுப்படுத்தும்.., அது மட்டுமல்லாமல் குங்குமம் நெற்றியில் வைப்பதனால் தீய வினைகள் தொடாமல் இருக்கும்.
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லுவார்கள் காரணம் திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக அல்ல குங்குமம் வைப்பதனால் பாலியல் சுரப்பி அதிகரிக்கச் செய்யும். அதுமட்டுமின்றி தினமும் நெற்றியில் குங்குமம் வைப்பதனால் கர்ப்பப்பை வலுவுற செய்யும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்