திமுகவின் போர்வாளாக என்றும் மதிமுக இருக்கும்..!! வைகோ அளித்த உறுதி..!!
திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்.பி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முதலமைச்சர், அமெரிக்க பயணத்தின் மூலம் ரூ. 7,000 கோடி மூதலீடுகள் தமிழ்நாடு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் மூடிவிட்டு சென்ற ஃபோர்டு கம்பெனியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்தார்..
மேலும் திராவிட இயக்கத்தை காப்பதற்கு திராவிட இயக்கமும், திமுகவும் இணைந்து செயல்படுவதை போல் மதிமுகவும் திமுகவுற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார். ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை என தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை எனவும் கவர்னர் பதவி தேவையில்லாதது என தெரிவித்தார்.. தமிழ்நாட்டில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவியை போன்று தற்குறியாக யாரும் இருக்க முடியாது எனவும் மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றுதான் முதலமைச்சரே தெரிவித்துள்ளார் என வைகோ தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..