மேட்டுபாளையம் மகாகாளி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
மேட்டுபாளையம் பாக்குக்கார தெருவில் அமைந்துள்ள மகாகாளி அம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பின் 28ம் தேதி விளக்கு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குத்து விளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த மாதம் 2ம் தேதி அக்னி கம்பம் நடுதலும், மே 8ம் தேதி பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்தலும் நடைபெற்றது.
மே 9ம் தேதி இரவு குண்டம் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்து அக்னி குண்டம் வளர்க்கப் பட்டது, நேற்று காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் வர்ணிப்பு வரவழைத்து, மகாகாளி அம்மன் கோவில் தலைமை பூசாரி முதலில் தீமிதியில் இறங்கினார்.
இவரை தொடர்ந்து உதவி பூசாரிகளும், பக்தர்களும் தீ மிதியில் இறங்கினர். இதில் சிறுவர்களும் அம்மன் அருள் வந்து இறங்கியுள்ளனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும், மக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இன்று மாலை அம்மன் வீதி உலாவும். நாளை சிறப்பு அபிஷேக பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக கோவில்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post