திருச்செந்தூர் முருகன் கோவிலில் பால் குடத்திற்கு அனுமதி மறுப்பு..! பக்தர்கள் அதிர்ச்சி..!!
திருச்செந்துர் முருகன் கோவிலில் பால்குடம் எடுத்து வரக்கூடாது என கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 6ம் தேதி சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தரகள், காவடி எடுத்து பாதயாத்திரை யாக, 9 நாட்களுக்கு பின் திருச்செந்தூர் கோவிலை அடைந்துள்ளனர்.
அதில் 51பக்தர்கள் பால் குடம் எடுத்துள்ளனர். ஆனால் கோவிலுக்கு உள்ளே, பால் குடத்துடன் செல்ல அனுமதிக்கவில்லை. எடுத்து வந்த பாலை விலாச மண்டபத்தில் கொட்டியுள்ளனர். 250 கிமி நடை பயணம் செய்து எடுத்து வந்த பாலை.., முருகருக்கு செலுத்த முடியவில்லை என்று பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டதற்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் கூறினர். கோயிலிற்கு வரும் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக.., பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி