ஆடி கிருத்திகை பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! 1700 பேர் பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன்..!
இன்று ஆடி கிருத்திகை முருகருக்கு மிகவும் உகுந்த நாள் என்பதால்.., முருகரின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை என்பதால் 1700 பக்தர்கள் முருகருக்கு பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து பால் காவடி.., பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் 1700 பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காவடி எடுத்த பக்தர்கள் மட்டுமின்றி லட்சம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பழனி ஆண்டவர் கோவிலில் மட்டுமின்றி மற்ற முருகர் கோவிலிலும் இன்று ஒரே நாளில் பல முருகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாக தெரிவித்துள்ளனர். இன்றைய நாளில் முருகரை தரிசனம் செய்தால் சிறந்த பலன் தரும் என்பதால்.., பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
அதற்காக இன்று முதல் இன்னும் மூன்று நாட்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் இரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..