பன்னீர் செஸ்வான் பிரட் ரோல் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பன்னீர் 250 கிராம்
வெங்காயம் 1/2 கப்
குடைமிளகாய் 1/2 கப்
செஸ்வான் சாஸ் 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சோயா சாஸ் 2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
பிரட் 6 பீஸ்
எண்ணெய் தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் பன்னீர், சோயா சாஸ், செஸ்வான் சாஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். பின் கொத்தமல்லி இலை தூவி தனியே வைக்கவும்.
பிரட்டின் ஓரங்களை நறுக்கிக் கொண்டு ஒரு பிரட்டின் நடுவில் தயாரித்த கலவையில் ஒரு ஸ்பூன் வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து மூட வேண்டும்.
பிரட்டின் ஓரங்களை தண்ணீர் கொண்டு மூடி விட வேண்டும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தயாரித்த பிரட்டை சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் செஸ்வான் பிரட் ரோல் தயார், இதனுடன் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.