பாகிஸ்தானில் ரயில் பயணிகளை கடத்திக் கொன்ற பலூச் விடுதலைப்படையினர் பலூசிஸ்தானில் மங்கோச்சர் நகரை கைப்பற்றி விட்டனர்.
பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலைப்படையினர் சுதந்திரத்துக்காக போராடி வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி சென்று பயணிகளையும், அதில், இருந்த ராணுவ வீரர்களையும் கொலை செய்தனர்.
இந்த நிலையில், பலூசிஸ்தானிலுள்ள மங்கோச்சர் நகரை அவர்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அதிகாரிகள், ராணுவத்தினரை அவர்கள் பிணைக்கைதிகளாக பித்து வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அரசு கட்டடங்கள் அனைத்தும் பலூச் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்குள்ள முக்கிய நெடுஞ்சாலையும் போராளிகள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. வங்கிகள், நீதிமன்றங்கள் தீக்கிரைக்கப்பட்டன. இதன் காரணமாக பாகிஸ்தானில் கிட்டத்தட்ட உள்நாட்டு போர் தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள்.
பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் கலாட் மாவட்டத்தில் மங்கோச்சர் நகரம் உள்ளது.