தர்பூசணியில் ஐஸ்கிரீமா..? வீட்டிலே செய்யலாம்..!
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது. இதிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வேற, குழந்தைகள் இந்த வெயிலுக்கு குளிர்ச்சியாக கடைகளில் வாங்கிக் குடுக்க சொல்லி தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள் என இல்லத்தரசிகளுக்கு கவலை வேண்டாம். இதோ அதற்கு ஏற்றாற்ப்போல வீட்டிலே ஆரோக்கியமாக குறைந்த செலவில் தர்பூசணியில் ஐஸ்கிரீம் செய்து தரலாம்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி – 1
கிரீம் மில்க் – 750 ml
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
* ஒரு முழு தர்பூசணி பழத்தை வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நறுக்கிய தர்பூசணியை மிக்ஸியில் போடாமல், அதனை ஒரு கரண்டி வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அச்சாறை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடுப்படுத்த வேண்டும்.
* பின் அந்த சாறு நன்றாக சுண்டிவரும்வரை சூடுபடுத்திக் கொள்ளவும்.
* அடுத்து கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹாண்டு மிக்சரை வைத்து அதை நன்றாக மிக்ஸ் செய்து விட்டு திக்காக கிரீம் பதத்திற்கு செய்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு சர்க்கரை போட்டு மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
* அத்துடன் அனைத்தும் நன்றாக ஒன்று சேர கலந்துக் கொள்ள வேண்டும்.
* பின் இதனை ஃபிரிஜ்ஜில் வைத்து ஒரு 6 மணி நேரம் கழித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குறைந்த செலவில் சுவையான தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)