காய்கறிகள் விலை உயர்வு குறித்து உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!!
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை குறைத்து.., சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பியூஷ்கோயலுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உட்பட பல காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணவீக்கத்தை பொறுத்தவரையில் 2023 மே மாதத்தில் தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65 % ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56% ஆகவும் இருந்தது ஒன்றிய புள்ளியில் அமலாக்க அமைச்சலாகத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை விட மேலும் மோசமாக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் வெளிச்சந்தையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டை காரர்களுக்கும் மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் எண்ணெய் மானிய விலையில் வழங்கி வருகிறோம். அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இருக்கும் பயனாளிகள் மட்டும் இன்றி மாநிலத்தில் இருக்கும் அனைவருக்கும் அரிசி, மற்றும் கோதுமையை இலவசமாக கொடுத்து வருகிறது.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு மற்றும் மைசூர் பருப்பு கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அது தொடர்பாக 10.07.23 அன்று விரிவான ஆய்வு கூட்டம் நடத்தி தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்பொருள் அங்காடியில் நியாயவிலை கடைகள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சில உணவு பொருட்கள் உள்நாடு அல்லது வெளிநாடு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு தற்போது அது நடவடிக்கையிலும் இருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவு பொருட்களை இறக்குமதி செய்வது எளிமையான ஒன்று, எனவே மாதம் 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு, ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலைமைச்சர் ஸ்டாலின், பொது விநியோக துறை அமைச்சருக்கு கடிதத்தில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.
Discussion about this post