சந்திராயன் 3 ஒத்திகை வெற்றி..! இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு..?
நிலவுக்கு அனுப்பப்படும் சந்திராயன் 3 விண்கலத்தின் ஏவுதலுக்கான திட்ட ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன் -2 , விண்கலத்தை 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது, பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திராயன்-2 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்று பாதையை சென்றடைந்தது எனினும் தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்ட படி லேண்டர் கலன் தரைஇறங்காமல் நிலவில் மோதி செயல் இழந்தது.
எல்.வி.எம் 3 ராக்கெட் :
அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியில் ஆர்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக சென்றடைந்து. இதை தொடர்ந்து சந்திராயன் 3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ம் தேதி மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவ உள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகளை விஞ்ஞாகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சந்திராயன் 3 விண்கலம் மொத்தம் 3900 கிலோ எடை கொண்டுள்ளது. அதில் 7 விதமான ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன் ஆர்பிடர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடதக்கது.
Discussion about this post