இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “செஸ் ஒலிம்பியாட்” போட்டியானது சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் மிக முக்கியமானதாக உள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர் சூழலால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த நடப்பு ஆண்டிற்கான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியகளும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து,செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னை நடத்தவுள்ளதைப் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது தமிழ்நாட்டுக்கொரு பெருமைமிகு தருணம். உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் செஸ் விளையாட்டின் மன்னர்களை வரவேற்கிறேன்”, என பதிவிட்டுள்ளார்.
Discussion about this post