நிலவின் வெற்றிப்பாதையில் சென்று கொண்டு இருக்கும் சந்திராயன்-3..!! இஸ்ரோவின் டுடே அப்டேட்..!!
சந்திராயன் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது 179 கிமீ உயரத்தில் புவி சுற்று பாதையில் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் 16 நிமிடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பின் ஜூன் 15ம் தேதி சந்திராயன்-3 விண்கலம் முதல் சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திராயன் 3 திட்டத்தில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக Orbit Raising maneuver எனப்படும் பாதையை உயர்வு எனும் வினை பொருள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் புவியின் சுற்று வட்ட பாதைக்கு மிக அருகில் வரும் பொழுது விண்கலம் உந்து விசையை மேற்கொள்ள செய்து.., அதை புவியின் நீள் வட்ட பாதையில் அதிக தூரம் செல்லும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சந்திராயன் 3 விண்கலத்தில் ரோவர் மற்றும் லேண்டருடன் விண்கலத்தை இயக்கும் உந்துவிசை அமைப்பும் உள்ளது. அதன் செயல்பாடுகளின் மூலம் கடந்த 16 நாட்களாக சந்திராயன் 3 விண்கலம் திட்டமிட்ட பாதையில் பயணித்து வருகிறது.
அதன் படி
ஜூலை 14ம் தேதி : 179 கிமீ உயரத்தில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.
ஜூலை 15ம் தேதி : முதல் சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 17 – இரண்டாவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 18 – மூன்றாவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 20 – நான்காவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 25 – ஐந்தாவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
இதனை தொடர்ந்து பூமியின் சுற்று வட்ட பாதையில் இவ்வளவு நாட்களாக பயணித்து வந்த சந்திராயன் 3 தற்போது நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியுள்ளது. இன்று இரவு 12 மணிக்கு தொடங்கி இரவு 1 மணி வரை நிலவை நோக்கி பயணித்துள்ளது. சந்திராயன் 3 விண்கலம் த்ரஸ்டர்களில் உந்துவிசை மேற்கொள்ள பட்டு நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது.
சந்திராயன் 3ன் வேகம் புவியின் சுற்று பாதையில் 10.5கிமீ வினாடிக்கு சென்றது.., தற்போது அதன் வேகம் 0.5கிமீ ஆக உள்ளது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே 3.6 முதல் 4 லட்சம் கிமீ வரை பயணம் இருக்கும் எனவும் ஆகஸ்ட் 5ம் தேதி நிலவின் சுற்று பாதைக்கு விண்கலம் சென்று விடும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.