தினமும் காலை மாலை விளக்கு ஏற்றினால், எல்லாம் நன்மைகளும் கிடைக்கும் என்பதற்காவே.
தீப விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி இருப்பதால் புற இருளை அகற்றி, உள்ளத்தில் ஒரு விதமான மன நிம்மதியை ஏற்படுத்தும்.
மனக்கவலை நீக்கி, வீட்டில் தீய சக்திகள் வரவிடாமல் தடுக்கிறது.
அதேபோல் பூஜை அறையில் ஒற்றை விளக்கை ஏற்றக்கூடாது, இரட்டை விளக்கை தான் ஏற்றவேண்டும்.
அகல் விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு என்று எந்த விளக்காக இருந்தாலும், அதை இரட்டை விளக்காக தான் ஏற்ற வேண்டும்.
அப்படி ஏற்றினால் நாம் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
ஒரு முகத்தில் ஏற்றினால் நன்மை கிடைக்கும்.
இரு முகம் குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருக்கும்.
மூன்று முகம் குழந்தை வரம் அளிக்கும். புத்திரம் சம்பந்தம் பெற்ற இன்பங்களை பெற்று தரும்.
நான்கு முகம் அஷ்டலட்சுமியின் அருளோடு செல்லம் செழிப்பாக வைத்திருக்கும்.
ஐந்து முகம் செல்வம், இன்பம் தந்து, குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படமால் வைத்திருக்கும்.
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்துகொள்ள.. தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post