அத்து மீறிய ஆட்டோ ஓட்டுநர்…!! நீதிபதி அதிரடி தீர்ப்பு..!!
வங்க தேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் ரேபிடோ ஆப் மூலமாக தரமணியில் இருந்து திருவான்மியூர் நியூ பீச் கடற்கரைக்கு செல்ல ஆட்டோ புக் செய்துள்ளனர்.
திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி (வயது 48) கல்லூரி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு திருவான்மியூர் நியூ பீச்சில் இறக்கிவிட்டுள்ளார். ராபிடோ செயலியில் 163 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் பால்பாண்டி கூடுதலாக 20 ரூபாய் கேட்டுள்ளார்.
கூடுதல் பணத்தை ஆட்டோவில் பயணித்த பெண் தர மறுத்து 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் சில்லறை இல்லை தனக்கு சரியாக 163 ரூபாய் மட்டும் கொடுங்கள் என ஆங்கிலத்தில் ஆட்டோவில் பயணித்த பெண்களுக்கு புரியும் படி பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த பயணிகள், ஓட்டுநரை ஸ்டுபிட் என திட்டியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆபாசமான வார்த்தைகளால் பெண்களை திட்டியுள்ளார். பின்னர் அந்த பெண் 200 ரூபாய் நோட்டை தூக்கி ஆட்டோ ஓட்டுநர் மீது ஆட்டோவில் வீசி சென்றதால் மறுபடியும் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பணத்தை தூக்கி வீசி நியே எடுத்துச் செல் என கூறி அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அதை அனைத்தையும் ஆட்டோவில் பயணித்த வடமாநிலத்தை சேர்ந்த மற்றொரு பெண் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆட்டோ ஓட்டுநர்கள் இழிவாக பேசுகிறார்கள் என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை வைத்து ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்பொழுது மேஜிஸ்திரேட் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்ததாகவும், ஆட்டோவில் பயணித்த பெண் ஆட்டோ ஓட்டுநர் கோபத்தை தூண்டும் வகையில் முதலில் பேசியதால் மட்டுமே ஆட்டோ ஓட்டுநர் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார் என்பதை அறிந்த மேஜிஸ்திரேட் இப்படி கோபத்தை தூண்டும் வகையில் வாடிக்கையாளர்கள் பேசினாலும் அமைதி காக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்த பெண்களிடம் இப்படி பேசினால் நமது நாட்டை என்ன நினைப்பார்கள் என்று அறிவுரை கூறிய மேஜிஸ்திரேட் 15 நாட்கள் தினமும் மாலை திருவான்மியூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுபோன்ற சூழல்கள் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் நிகழ்வதால்., அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வழக்கறிஞ்சர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.