Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 9 முக்கிய அறிவிப்புகள்..!!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!! 

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

by logeshwari
April 28, 2025

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 9 முக்கிய அறிவிப்புகள்..!!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!! 

 

 

 

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி விதி 110-ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நிர்வாகத்தினுடைய தூண்களாவும், அரசின் கரங்களாவும் விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களும், பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளும் பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நம் மாநிலம் அகில இந்திய அளவில் முதலிடத்திலும், பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். அரசு நடைமுறைப்படுத்தி வருகிற நலத் திட்டங்கள், யாருக்கும் விட்டுப் போகாமல், அனைத்து மக்களையும் சென்றடைய பணியாற்றும் அரசு ஊழியர் ஒவ்வொருவரையும் இந்த தருணத்தில் தமிழ்நாடு அரசின் சார்பிலேயும், தனிப்பட்ட முறையிலேயும் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

முதல் அறிவிப்பு :

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படும். எடுக்கப்பட்ட விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை பணப்பயன் பெறலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது படி, 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றிற்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து இதனை நிறைவேற்றும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இரண்டாவது அறிவிப்பு :

01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் 1252 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றிற்கு செலவிடப்படும் என்று தெரிவித்தார்

மூன்றாவது அறிவிப்பு :

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

நான்காவது அறிவிப்பு :

அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிப்பதற்காக அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் நடப்பாண்டிலிருந்து, தொழிற்கல்வி பயில 1 இலட்சம் ரூபாயும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வி படிக்க 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

ஐந்தாவது அறிவிப்பு :

பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் வழங்கப்படும். பெண் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக 5லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஆறாவது அறிவிப்பு :

பண்டிகை நாட்களில் முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகையானது ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். இதனால் அரசிற்கு 24 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஏழாவது அறிவிப்பு :

ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாவது அறிவிப்பு :

அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு :

மகப்பேறு அரசு பெண் பணியாளர்களுக்கு ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பு ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிகாண் பருவத்தின் அடிப்படையில் கணக்கீடு பட்டு வந்த மகப்பேறு விடுப்பு காலமானது தற்போது அந்த விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலை ஏற்படுவது வேதனை அளிக்கிறது.

மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் தமிழக அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இவ்வாறே முதலமைச்சர் உரையாற்றினார்.

Tags: #தமிழ்நாடுதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடர்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

தமிழ்நாடு

வீட்டுக்குள் பாம்பு வருகிறதா? இதை செய்யுங்கள் போதும்

Next Post

மூட்டு வலிக்கு சிறுநீர் குடிக்கலாமா?- நடிகர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.