முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு நாய் கடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்பட்டவருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். மும்பை இந்தியன் அணி சார்பில் அர்ஜூன் விளையாடி வரும் நிலையில், இவரது பவுலிங் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறைந்த ஓவர்களிலேயே வீரர்கள் அதிக ரன்களை எடுக்கும் அளவிற்கு மோசமாக பந்துவீசுவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஒருசில போட்டிகளில் களமிறக்கப்பட்ட அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நாய் கடித்ததால் அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 போட்டிக்கு முன்னதாக தனக்கு விபத்து ஏற்பட்டதாக மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mumbai se aaya humara dost. 🤝💙 pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023