தமிழிசையிடம் ஓடிய அண்ணாமலை..! அமித்ஷாவிடம் நிர்மலா சீதாராமன் சொன்னது..?
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜனை, மாநில தலைவர் அண்ணாமலை ஏன் திடீரென ஓடோடி சென்று சந்தித்தார் தெரியுமா..? இதை பற்றின பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா கடிந்து கொண்ட எச்சரிக்கை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டிப்பு :
பொது மேடையில் அமித்ஷாவின் அந்த கண்டிப்பு வெவ்வேறு கோணங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. எதற்காக தமிழிசையை அவர் கண்டித்தார் என்பதற்கு நிறைய சம்பங்களை மீடியாக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அமித்ஷாவுக்கு எதிராக நாடார் அமைப்புகள் கொந்தளிக்கும் அளவுக்கு அந்த சம்பவம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், உண்மையான காரணம் குறித்த முக்கியத் தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது..
“தென்சென்னையில் போட்டியிட விரும்பினாராம் தமிழக பாஜக மாநில செயலாளர்களில் ஒருவர். ஆனால், வாய்ப்பை தமிழிசை தட்டிக்கொண்டுப் போய்விட்டதால் விரக்தியாகி விட்டாராம். அந்த மாநில செயலாளருக்கும். தமிழிசைக்கும் ஏற்கனவே ஆகாதநிலையில் தற்போது பதவியும் கொடுத்தது கடுப்பை கிளப்பியுள்ளது…
ரகசியம் :
இந்நிலையில், அமைச்சரவையில் தமிழிசையை சேர்க்கப்படுவதாகவும், அதற்கான முயற்சியில் தமிழிசை ரகசியமாக இறங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் தமிழக பாஜகவில் பரவியது.
இதையறிந்த அந்த மாநில செயலாளர், நிர்மலா சீதாராமனை தொடர்புகொண்டு, “உங்களை மோசமாக விமர்சிக்கிறார் தமிழிசை. உழைக்காமல் நிர்மலா சீதாராமன் அமைச்சராகிவிட்டார், உழைத்தாலும், பிற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் தமிழிசை கவர்னர் பதவியையும் இழந்து, எம்.பி.யும் ஆக முடியாமல் தவிக்கிறார் என்ற பாணியில் உலவும் மீம்கள் பின்னணியில் தமிழிசைதான் உள்ளார்.
அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிருந்ததாகவும் அதனை நீங்கள் தான் தடுக்கிறீர்கள் என்றும் எல்லோரிடமும் தமிழிசை சொல்லி வருகிறார்.
உங்களை கொச்சையாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.
அமித்ஷா :
இதைக்கேட்டு டென்ஷன் ஆகிவிட்ட நிர்மலா சீதாராமன், உடனே இந்த விஷயத்தை அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளார்.. உடனே அமித்ஷாவும் தமிழிசை மீது கோபப்பட்டுள்ளார்.
இந்த சூழலில்தான் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவுக்கு வந்த அமீத்சா, தனக்கு வணக்கம் வைக்க வந்த தமிழிசையிடம் கோபத்தை கொட்டி விட்டாராம். தமிழிசை மேடைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்கிறார்கள்.
மாநில செயலாளர் :
உடனே அந்த மாநில செயலாளர் மறுபடியும் நிர்மலா சீதாராமனிடம் சென்று, “இந்த போஸ்டர் விவகாரத்தின் பின்னணியில் தமிழிசைதான் இருக்கிறார்” என நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா தெரிவித்துள்ளனர்.. ஆனால் அது உண்மையா பொய்யா என சரியாக வெளிவரவில்லை…