“வக்பு சட்டத் திருத்தம்..” நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டம்..!! மீண்டும் வெடித்த சர்ச்சை..!!
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்திருந்தார். இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் :
வக்பு வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் சொத்து வக்பு வாரிய உள்ளிட்டவற்றை முடிவு செய்வது தொடர்பான சட்ட பிரிவு 40ஐ வக்பு மசோதா தவிர்க்க முயற்சி செய்வதாகவும்., வாரியத்தின் அதிகாரத்தை மாற்ற மசோதா மட்டுப்படுத்தியுள்ளதாக கூறுகிறது.
வக்பு வாரிய சொத்துரிமையானது அதனை ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தின் அனைத்து சொத்துக்களையும், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முறைப்படி பதிவு செய்து அதற்குரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்த மாற்றங்கள் எல்லாம் வக்பு வாரியத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் இருப்பதால் எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்தனர்.,
இந்த சட்ட திருத்த மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மக்களவையில் பேசியாதவது “ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியும் என்று யாராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா..? என கேள்விகளை எழுப்பியுள்ளார்,.
இந்த வக்பு திருத்த சட்ட மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி பேசியதாவது, “வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவானது, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி மனித இனத்திற்கே எதிரான ஒன்று. நம் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது.
இப்படியே போனால் அந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள். அதற்காக ஒரு மதத்தின் உரிமையை மற்றொரு மதத்தினர் தலையிட கூடாதா.. அரசு சொத்துகளை வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்த உரிமைகளை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம்.., என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா..? என இவ்வாறே பேசியிருந்தார்.
தற்போது இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அசாதுதீன் ஓவைசி, திமுகவின் ஆ.ராசா என மக்களவையிலிருந்து 21 எம்பிக்களும், மாநிலங்களவையிலிருந்து 10 எம்பிக்கள் என பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 எம்பிக்கள் பங்கேற்றனர்.
இந்த குழுவின் முதல் கட்ட கூட்டமானது இன்று டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறபோவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களுடைய கருத்துக்களை மற்றும் மசோதா மீதான அறிக்கையை, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் வாரத்திற்குள்ளோ அல்லது கடைசி நாளிலோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..