கணவரை இழந்த பின், கண்ணீரில் நின்றேன்..! ஆனால் இன்று..!! – ஊரும் உறவும்-4
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பார்த்து நெகிழ்ந்த ஒரு அம்மாவின் கதையை.., கேட்டேன்.
கேட்ட பின் அவரின் கதையை விட அவரின் குணம் எனக்கு பிடித்தது.., அவரை பற்றி இதோ
என் பெயர் சாந்தி, நான் 17 ஆண்டுகளாக தள்ளு வண்டி கடை நடத்தி வருகிறேன்.
எனக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகி விட்டது. ஆனால் நீண்ட காலம் என் கணவரோடு நான் சேர்ந்து வாழவில்லை.
ஒரு ரயில் விபத்தில் என் கணவர், இறந்து விட்டார். இறந்த பின் என் வாழ்க்கையில் பல இன்னல் களை சந்தித்தேன்.
கணவரை இழந்த பின்.., ஒரு பெண் வேலைக்கு சென்றால் அந்த பெண்ணக்கு, இந்த ஊர் கொடுக்கும் பெயர் வேறு ஒன்று,
ஆனால் “பேர் கொடுக்கும் ஊர், சோறு” கொடுக்காது.
எனவே அவர்களின்.., வெட்டி பேச்சுக்களை உதாசனம் படுத்திவிட்டு, என் குழந்தைகளுக்காக நான் வேலைக்கு செல்ல முடிவு எடுத்தேன்.
சிறு வயதிலேயே கணவரை இழந்ததால், எனக்கு மறு திருமணம் செய்து வைக்க என் குடும்பத்தினர் யோசித்தனர்.
ஆனால் என் கணவர் என்னுடன் உயிரோடு தான் இல்லை, ஆனால் என் உயிரில் கலந்து இருக்கிறார். எனவே இரண்டாவது திருமணம் செய்து அவர் இடத்தில் மற்றொருவரை நினைக்க என் மனம் ஒப்புக்கொள்ள வில்லை.
குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து.., இந்த வேலையை செய்ய தொடங்கினேன்.
என் குழந்தை களை நன்றாக படிக்க வைத்தேன்.
இப்பொழுது, என் பொண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசி முடித்துள்ளேன்.
இங்கு ஆதாரவற்ற குழந்தைகள், வயதானவர்கள் வந்து உணவு கேட்டால், இலவசமாகவே கொடுத்து விடுவேன்.
சில சமயம் காசு குறைவாக உள்ளது, ஆனால் பசி நிறைய உள்ளது. என்று கேட்டு வந்தாலும் கொடுத்துவிடுவேன்.
காரணம் பசியோடு நாங்கள், வாழாத நாட்களே இல்லை..
என்னை போன்ற கணவரை இழந்த பெண்களுக்கு. நான் சொல்ல இருப்பது ஒன்று தான், உங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தை உங்களால் மட்டும் தான் அமைத்து தர முடியும்.
ஊர் என்ன பேசுவார்களோ என நினைத்தால்.., நாம் அடுத்த படிக்கு செல்ல முடியாது..
உங்களுக்காகவும், உங்கள் குழந்தை களுக்காகவும் வாழ தொடங்குங்கள்..
மேலும் இது போன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி
Discussion about this post