ஹெல்தியான கொண்டக்கடலை புலாவ்…!
கொண்டக்கடலை 1 கப்
பாஸ்மதி அரிசி 300 கிராம்
நெய் 2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
வெங்காயம் 2 நறுக்கியது
பச்சை மிளகாய் 5 கீறியது
தக்காளி 4 நறுக்கியது
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
சென்னா மசாலா தூள் 2 ஸ்பூன்
புதினா இலை
கொத்தமல்லி இலை
உப்பு தேவையானது
தண்ணீர்
சூடு தண்ணீர் 2 கப்
ஒரு குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, மஞ்சள்தூள்,உப்பு,கிராம்பு,பிரியாணி இலை சிறிது தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஒரு வாணலில் நெய்,எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்ரை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
அதற்கு பின்பு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சென்னா மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பின் வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் புதினா,கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து சூடான தண்ணீரை சேர்த்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
15 நிமிடங்களுக்கு பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் ஹெல்தியான கொத்தமல்லி இலை தயார்.