அடுத்த முறை இதை ட்ரைப் பண்ணி பாருங்க..!
உருளைக்கிழங்கை மசித்து செய்யும் உணவுகளில் சிறிது ஓமம் சேர்த்து சமைக்க நல்லா மணமாக இருக்கும்.
தக்காளியின் தோசை ஈசியாக எடுக்க தக்காளியை சிறிது லேசாக கத்தியால் கீறி சுடு நீரில் போட்டு எடுத்தால் ஈசியாக வந்துவிடும்.
இரும்பு பாத்திரத்தில் சமைத்த வாசனை வராமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் வாசம் வராது.
முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து துவையல் செய்து தோசையுடன் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
ஜவ்வரிசியை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும் ருசியும் சூப்பராக இருக்கும்.
தோசை ஊற்றும்போது அதன் மேலே துருவிய தேங்காய் சேர்த்தால் சாப்பிட அருமையாக இருக்கும்.
கேசரி செய்யும்போது அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து செய்தால் சுவையாக இருக்கும்.
தேங்காய் துருவலை வதக்கி பின் உப்பு சிறிது கலந்து வைக்க இரண்டு நாட்கள் நள்ளாயிருக்கும்.
இனிப்பு வகைகளை செய்யும்போது சிறிது உப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்
பிரியாணி செய்யும்போது நெய் இல்லையென்றால் கவலை வேண்டாம், சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுபோகாமல் இருக்க அதில் சமையல் வினிகரை சேர்த்து செய்தால் கெடாமல் இருக்கும்.
தீப்புண் வடு மறைய வாழைத்தண்டை தீயில் சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவலாம்.
முட்டை குழம்பு வைக்கும்போது முட்டை குறைவாக இருந்தால், ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம், உப்பு சேர்த்து பணியாரம் சுட்டு எடுத்து அதனை குழம்பில் சேர்க்கலாம்.