விளையாட்டிற்கு மாலை போட்டேன் என நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் நடித்து தயாரித்துள்ள சரக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
இதில் கலந்துக்கொண்ட நடிகர் கூல் சுரேஷ் “கையில் ஒரு மாலையுடன் வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். ‘எல்லோருக்கும் மாலை போட்டிங்க நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?” என அவர் பேசினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறு தான். அவருடைய செயலைக் கண்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.
இந்நிலையில் இதுத்தொடர்பாக மன்னிப்புக் கேட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ்.