நாகை எம்.பி செல்வராஜ் காலமானார்..! மறைவிற்கு இது தான் காரணமா..? ஸ்டாலின் இரங்கல்..!
நாகை மாவட்டத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் (67) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த செல்வராஜ் அரசியல் மீது உள்ள ஆர்வத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.., கட்சிக்காக அயராது உழைத்து தனது கடின உழைப்பின் மூலம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார்.
பின்னர், 1989 நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாகப்பட்டினத்தின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து 1996, 1998 நடத்தப்பட்ட மக்களவை தேர்தல்களில் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் நாகை தொகுதியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019ம் ஆண்டு வந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.., அதன் பின் சில மாதங்கள் களித்து உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்..,
இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை, மூச்சுத்திணறல் காரணமாக மீண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.,
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்வராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அதிகாலை இரண்டு மணி அளவில் உயிர் பிரிந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் நாகப்பட்டினத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் :
நாகை எம்பி செல்வராஜ் மரணம் அடைந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன், என் மீதும் கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் என் மீதும் திமுக மீதும் அதிக பாசமும் மரியாதையும் கொண்டவர்.. என முதலமைச்சர் ஸ்டாலின் நாகை எம்.பி செல்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..