ஒரு விவசாயியின் கதை – ஊரும் உறவும் 17
நாம் உண்ணும் உணவை தயார் செய்யும் விவசாயி மட்டும் இல்லை என்றால் நாம் உயிர் வாழ்வதே கஷ்டம். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் கஷ்டம் என்னவென்று நமக்கு தெரியுமா..
ஒரு பசுமையான கிராமத்தை சேர்ந்த சில விவாசாயிகள் பல மாதங்களாக கஷ்டப்பட்டு தக்காளி மற்றும் காலிஃப்ளவர் விளைச்சல் செய்துள்ளனர். இந்த விளைச்சல் செலவு, உரச்செலவு மற்றும் வண்டிகூலி என 1லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.
விளைச்சலில் வந்த காய்கறிகளை.., விற்பனை செய்வதற்காக சந்தைக்கு எடுத்து சென்ற போது, அதற்கான லாபம் கிடைக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தக்காளி கிலோ 4 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டதாகுவும். ஒரு காலிஃப்ளவர் 5 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதில் வரும் லாபத்தை வைத்து தான் என் மகளின் கல்லூரி படிப்பு செலவு, மற்றும் விவசாயத்திற்காக வாங்கிய கடன் என அனைத்து தேவைகளையும். பூர்த்தி செய்ய வேண்டும். என கூறினார்.
இதில் எங்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தோசம், “எங்களை போன்ற சில ஏழை மக்களுக்கு காய்கறிகள் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது தான்”. எனவும் உணர்ச்சி பூரமாக பேசினார் விவசாயி.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகளை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post