விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை..!! இதை செய்ய மறக்காத்தீங்க..!!
ஆவணி மாதத்தின் வளர்பிறை திதியில் வரும் நாளையே “விநாயகர் சதுர்த்தி” தினமாக கொண்டாடுகிறோம்..
விநாயகரின் முழு அருளும் கிடைக்க இந்த பூஜைகளை செய்ய மறக்காதீங்க.. விநாயகருக்கு வன்னி இலை மற்றும் அருகம்புல் மாலை என்றால் மிகவும் இஷ்டம்.., எனவே இன்றைய நாளில் இந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வதால் இன்னும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்… மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பூஜை என்பதால் நாம் கேட்ட வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்..
அவ்வாறு வழிபாடு செய்வதை பத்ர வழிபாடு என அழைப்பார்கள்.. பத்ரம் என்றால் இலை என்று பொருள். பொதுவாக பூக்களை காட்டிலும் இலைகள் பல இடங்களில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்று…
நம் வீட்டின் அருகில் கிடைக்கும் இலைகளை வைத்தே இந்த பூஜைகள் செய்யலாம் “இல்லை என்ற சொல்லே இல்லை” என்பது அடியார் வாக்கு.. அந்த சொல்லிற்கு இணங்க நம்மால் முடிந்த அனைத்து இலைகளையும் வைத்து பூஜைகள் செய்யலாம்..
பூஜைகள் செய்ய வேண்டிய இலைகள் :
மாசி இலை, கிளா இலை, வில்வம், அருகு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கொண்டு பூஜைகள் செய்யலாம்.. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் சிறந்தவையாக கருதப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு இலைக்கும் ஒரு பலன் இருக்கிறது.. அதை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலாவதாக கற்பூரவள்ளி இலை.. விநாயகரின் உருவத்தை ஒற்றி இருக்கும் இந்த கற்பூரவள்ளி இலையை அர்ச்சனைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இந்த இலைகள் நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கும் என்பதால் அனைவராலும் இந்த இலை கொண்டு அர்ச்சனை செய்ய முடியும்..
வன்னி இலை கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நம்முடைய வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சுகமான வாழ்க்கை கிடைக்கும்.
வாழ்க்கையில் அனைவருக்கும் முன்னேறி செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.. அதே சமயம் ஒருவரது வளர்ச்சி என்பது பலருக்கும் பொறுக்காத ஒன்று. எதிரிகள் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் எதிரிகள் தொல்லை இருப்பவர்கள் விநாயக பெருமானுக்கு மாவிலை கொண்டு பூஜை செய்து வழிபட்டால் எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து வழக்குகள் நல்ல முறையில் தீரும்.
பணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதே சமயம் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பண கஷ்டத்தில் மாட்டி கொண்டு செய்வதறியாது இருப்பவர்கள் வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வம் பெருகும்.
ஒரு சில சமயங்களில் நம்மை அறியாமல் பிறருக்கு நாம் துரோகம் விளைவித்து விடுகிறோம்.. அப்படி தான் செய்த தவறை நினைத்து வருந்துவது உண்டு.., ஆனால் அந்த துரோங்கள் பாவங்களாக மாறி விடுகிறது..
அப்படி தன்னுடைய தவறை நினைத்து வருந்தி மோட்சம் தேடுபவர்கள் ஊமத்தை இலை கொண்டு பூஜை செய்தால் தீய குணங்கள் நீங்கி விடும்..
மனிதனின் வாழ்க்கையானது மாறுபட்டு கொண்டே இருக்கும்.. நம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கவும் நல்ல வருமானமும் இனிய இல்லறமும் அமைய நெல்லி இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.
ஒரு சிலருக்கு முகத்தில் பரு அல்லது கட்டி என பல பிரச்சனைகள் இருக்கும்.. அது போன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் நாயுருவி இலை கொண்டு அர்ச்சனை செய்தால், சரும பிரச்சனைகள் நீங்கி நல்ல தோற்றம் கிடைக்கும்..
மேற்கண்ட இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரச்சனைகள் நீங்குவது மட்டுமின்றி விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும்… என்பது ஐதீக உண்மை..