திண்டுக்கல் மாவட்டம் அப்பாதுரை ஊராட்சியில் தனது வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதாக நம்பிராஜ் என்பவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நம்பிராஜன் வீட்டு கூரையில் சோதனையிட்டதில் ஒன்றல்ல 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் குளிர்ச்சியான இடத்தை தேடி இடம் பெறக்கூடும் என்றும், அதனால் வீட்டிற்குள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.