மதுரை கள்ளழகர் திருவிழாவில் 1 1/2 கோடி ரூபாய் காணிக்கை ..!!
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பொழுது கொண்டுவரப்பட்ட உண்டியலில், பக்தர்கள் அளித்த காணிக்கைகள் நேற்று என்னப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே, இரண்டு லட்சத்து, பன்னிரென்டாயிரம் ரூபாய் காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது.
பணம் மட்டுமின்றி தங்க நகைகள் 15 கிராமும், வெள்ளி 63 கிராமும் கிடைத்துள்ளது. கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் ஒரு கோடியே இரண்டு லட்சத்து 73 ஆயிரம் பணமும், 88 கிராம் தங்கமும் கிடைத்தது.
இந்த ஆண்டு அதை விட குறைவாக கிடைத்துள்ளது, என்றும் கூறினார்.
-வெ.லோகேஸ்வரி