உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி இறந்த முன்னோர்களுக்கு தேங்காய், வாழைப்பழம் மற்றும் பூ மலர்கள் ஆகியவை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து அதை நீர் நிலைகளில் விட்டு தர்ப்பனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை நினைவு கூறும் வகையில், புனித நீர் நிலையான திருவண்ணாமலை அய்யங்குளம் கரையில், ஏராளமான பொதுமக்கள் தங்களின் இறந்த மூதாதையர்களுக்கு தேங்காய், வாழைப்பழம் எள்ளு, மற்றும் மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மயிலாடுதுறையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்டத்தில் மஹாலய அமாவாசை அன்று மயிலாடுதுறை மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள். இந்நிலையில், இந்தாண்டு காவிரியில் தண்ணீர் குறைந்த அளவில் இருப்பதால் அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களின் வருகை குறைந்துள்ளது.
மேலும் இது போன்ற முக்கிய தினங்களில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் காதர்பாஷா என்பவரின் பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.