சிவராத்திரியில், சிவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்..!!
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இன்று ஒரே நாளில் இருப்பது மிகவும் சிறப்பு மிக்கது, பிர என்றால் பொறுத்து கொள்வது, தோஷம் என்றால் பாவம். இறைவன் நாம் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து நமக்கு மறு ஜென்மம் அளிக்கும் காலமே பிரதோஷம் எனப்படும்.
விரதங்களில் முக்கியமான விரதம் பிரதோஷ விரதம், இந்த விரதத்தை கடை பிடிப்போர் கஷ்டங்கள் நீங்கி இறைவன் இன்பத்தை தருவார். பிரதோஷம் அன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால், கேட்ட வரம் கொடுப்பார்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், உங்களின் இஷ்ட தெய்வத்தை ஒரு நொடி நினைத்து வழிபட்டால் போதும். பிரதோஷத்தில் விரதங்களை முறையாக கடை பிடிப்போருக்கு மட்டுமே சிறந்த பலன் கிடைக்குமாம்.
ஒருவர் தொடர்ந்து 24 வருடம் சிவராத்திரி விரதம் இருந்து வருகிறார் என்றால், அவரின் ஆயுள் காலம் முடியும் பொழுது அவர் சொர்க்கத்தை சென்று அடைவார். மேலும் 21 தலை முறையை காக்கும் என்பதும் ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.