சுகத்தை விற்கும் பெண்களுக்கும் மனம் உண்டு..!! வலிகள் நிறைந்த வாழ்க்கை..!! ஊரும் உறவும்- 35
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு வரலாற்றில் கொடுக்கப்பட்ட நடுங்க வைக்கும் தண்டனைகள்… ஷாக் ஆகிடுவீங்க ….
உலகம் தோன்றிய காலம் முதலே பெண்களுக்கே எதிரான அத்துமீறல்களும், சுரண்டல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் இடைப்பட்ட காலம் என்று அழைக்கப்படும் 4 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் வரலாற்றின் இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலத்தில் மனிதர்களுக்கு எதிராக குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடத்தப்பட்டது. இந்த காலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பல பிரத்தியேக தண்டனைகள் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டன.
மரண தண்டனைக்கு பதிலாக இடைக்காலம் பெண்களுக்கு மட்டும் பலவிதமான கொடூரமான சித்திரவதைகளை உருவாக்கியது. மனித வரலாற்றில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கையை இறுக்கும் கருவி (Hand Clamps) இது சீன நிலப்பிரபுத்துவ வம்சங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு தண்டனையாகும், இது 19 ஆம் நூற்றாண்டில் இருந்த கிங் வம்சத்தின் இறுதி வரை நீடித்தது.
இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் சித்திரவதை கருவிகளில் இதுவும் ஒன்றாகும். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் தனது விரல்களை சித்திரவதைக்கான ஒரு சிறப்பு கருவியில் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த சாதனம் பாதிக்கப்பட்டவரின் விரல் நுனியை அழுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் மயங்கிவிட்டால் அவர்கள் மீது குளிர்ந்த நீர் ஊற்றி எழுப்பி சித்திரவதையைத் தொடருவார்கள்.
இது இடைக்கால ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது, மேலும் இது கைப்பிடி என்று அறியப்பட்டது. குற்றவாளியின் தலை, கைகள் மற்றும் கால்கள் உட்பட பெண் உடலின் அனைத்து பகுதிகளையும் நசுக்குவதற்கு இது அனைத்து அளவுகளிலும் வடிவமைக்கப்பட்டது.
-நிரோஷா மணிகண்டன்.