புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி.. இறுதியில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரிஜு விஜயன்-பிரியா நாயர். இதில் பிரியா பிரியா மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் அவருடைய சிகிச்சைக்காக இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரியாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு வாரமும் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் விஜய் சிலரிடம் கடன் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தும் அவரால் திருப்பி செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் கடன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்தே வருவதால் மனமுடைந்த தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
அதனைதொடர்ந்து நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதைனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்