பெண்கள் கண்ணாடி வளையல் அணிய சொல்வது ஏன்..?
கண்ணாடி வளையல் என்றால் அணியாத பெண்களும் இல்லை, அதை விரும்பாத பெண்களும் இல்லை. கண்ணாடி வளையல் என்பது, கைகளில் அணிவதற்காக மட்டும் அல்ல. அதில் பல உடல் ஆரோக்கியம் பற்றிய குணமும் அடங்கியுள்ளது.
கண்ணாடி வளையல் அணிவதற்கான காரணம் கண்ணாடி வளையலில், உலோகம் மற்றும் கண்ணாடி கொண்டு தயாரிக்கப் படுகிறது, இது கைகளில் உள்ள சில நரம்புகளை சீராக இயங்க உதவி செய்கிறது.

பஞ்சாப் வளையல்கள் தந்தம் கொண்டும், பெங்கால் வளையல்கள் சங்கு கொண்டும் தயாரிக்கப்படுகிறது. கண்ணாடியில் வரும் ஒளிர் எதிர்மறை ஆற்றல்களை விரட்டுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல் அணிய சொல்வதற்கான காரணம். அதில் எழுப்படும் ஓசை கருவில் உள்ள குழந்தைக்கு ஆற்றல் கொடுப்பதோடு, இந்த வளையல் ஓசை குழந்தையின் மூளைக்கு சென்று சுறுசுறுப்பாக வைக்க செய்கிறது. கண்ணாடி வளையலில் ஏற்படும் ஓசை குழந்தைக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

கண்ணாடி வளையல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்பும் பொழுது, பெண்களின் சூரிய நாடியை லேசாக வைக்கிறது. இதனால் தீய ஆற்றலில் இருந்து பெண்களை பாதுகாப்பாக வைக்கிறது.
வளையல் என்று பெண் தெய்வங்களுக்கும் மிகவும் பிடிக்கும். திருமணம் ஆனா பெண்கள் கண்ணாடி வளையல் அணிந்து கணவர்களுக்கு சாப்பாடு போட வேண்டும்.., இதனால் என்றும் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
















