ADVERTISEMENT
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்றும், இதனால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
மிரட்டல் விடுத்த முகவரியும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மிரட்டல் குறித்து சைபர் கிரைம் காவல்துறை உதவியோடு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
குற்றவாளி மெயில் ஐடியை துவங்கிய செல்போன் எண்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில், 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வழக்குகள் அனைத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)