தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, மற்றும் கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அதன்பின் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதன் காரணமாக, திருக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சாந்தாராமன் கோவில் பல்லவன் குளக்கரையில் 500-க்கும் மேற்பட்டோர் காலை 6 மணி முதலே தொடர்ந்து தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, ஐய்யங்ககுளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் புதிய பிரார்த்தனை கூடம் இன்று துவக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிகள் நாமாத்வாரை திறந்து வைத்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய வளாகத்தில் வெளியே அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.