என்னடா சோறு இது.. கல்யாண வீட்டில் அசைவ உணவு கேட்டு தகராறு…! இறுதியில் திருமணம்..!
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகர் எனும் கிராமத்தில் அபிஷேக் சர்மா என்பவருக்கும்ம், சுஷ்மா என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி மணமகன் உறவினர்களுடன் பெண்ணின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்துள்ளார். மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் மாலைகளை மாற்றிக் கொண்டதும் அங்கு உணவு பரிமாறப்பட்டது.
பரிமாறப்பட்ட உணவுகளில் சைவ உணவு வகைகளாகவே இருந்துள்ளன. அசைவ உணவு எதுவும் இல்லாததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை முற்றி அடிதடி நடந்துள்ளது.
ஒருவரை ஒருவர் சரமாரியாகவும், கண்மூடித்தனமாகவும் தாக்க தொடங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த நாற்காலிகளையும் தூக்கி வீசி அடித்துக்கொண்டனர். இதனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் கைவிடப்பட்டுள்ளது.
பின்னர் திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில் மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் மணமகன் வீட்டார் வரதட்சணையாக ரூ.5 லட்சம் வாங்கியதாகவும் அசைவ உணவு இல்லை என்ற காரணத்திற்காக திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
-பவானி கார்த்திக்