அவனின் நினைவின்றி வேறு எது..?
வாசகர் உஷா அனுப்பிய கவிதை..
அவனை பார்க்கும்போது ஒரு தயக்கம்
அவனை பார்க்காத போது ஒரு ஏக்கம்
தயங்கி தயங்கி காதலை சொல்லவில்லை
ஏங்கி ஏங்கி காதலை வளர்க்கிறேன்…
காதல் மட்டும் வளரவில்லை
என் கற்பனையும் வளர்கிறது…
அவன் நினைவில்
என் நினைவில் நிற்கும் அவனிடம்
நான் எப்படி சொல்வேன்..?
நான் உன்னை காதலிக்கிறேன்
என்ற தயக்கமும் ஏக்கமும் தான் என்னை கொள்கிறதே..
என் மனதில் இடம் பிடித்த அவன் மனதில் இடம் பிடிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்…
-உஷா சண்முகவேல்
இதுபோல உங்களின் திறமையையும் நம் மதிமுகவில் வெளிப்படுத்த வேண்டுமா கீழே தெரியும் இந்த மின் அஞ்சல் அல்லது வாட்ஸ் அப் எண்ணிற்கு உடனே அனுப்புங்க…. பங்கேற்கும் வாசகர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு..
Gmail ID : admin@madhimugam.com
Whast App Number : 6374169019